இத்திருக்கோவில் தரிசனம் செய்ய ஆவல் கொண்டு தரிசனம் காண முடியாமல் மனம் வருந்திய வேளையில் அகத்தியர் ஈ வடிவம் பெற்று மரகதநாதரை அபிஷேகித்த மலை
தேவாரப்பாடல்கள் பெற்ற திருஈங்கோய்மலை ஸ்ரீ மரகதநாதர் திருக்கோவிலின் சிறப்புக்கள்
முனிவர்களால் வணங்கப்படும் அகத்தியமாமுனிவர் ஓர் சமயம் தீர்த்த யாத்திரையாக திருக்கேதாரம் முதல் திருராமேஸ்வரம் வரை சென்று கொண்டிருக்கையில்
இத்திருக்கோவில் தரிசனம் செய்ய ஆவல் கொண்டு வரும் வேளையில் இக்கோவில் அர்ச்சகர் பூஜை முடித்து ஆலய திருக்கதவுகளை பூட்டி சென்றுவிட்டார்.
இறைவனது தரிசனம் காண முடியாமல் மனம் வருந்திய வேளையில் அகத்தியருக்காக நம் இறைவன்,
அசரீரீ வழியே அகத்திய முனிவரே நீங்கள் ஈ வடிவம் பெற்று திருக்கதவிலுள்ள துளையின் வழியே வந்து என்னை தரிசிக்கலாம் என்று திருவாக்கருளினார்.
அதன் படியே அகத்தியர் ஈ வடிவம் கொண்டு நம் இறைவனை தரிசித்ததாக இத்தல வரலாறு கூறுகின்றது, இதனை விரிவாக கூறுவதென்றால்
அகத்தியர் ஈ வடிவம் பெற்று அங்குள்ள கானகம் சென்று தேன் கூடுகளில் உள்ள தேனை பெற்று பல்லாண்டுகள் இங்குள்ள மரகதநாதரை அபிஷேகித்து வந்தமையால் இம்மலை ஈங்கோய்மலை எனப்பட்டது.
இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்வது பெரும் சிறப்பு இன்னும் இன்னும் பல சிறப்புகள் பெற்றது இத்திருக்கோவில் அச்சிறப்புக்கள் பற்றி நாளையும் தொடரும்.
எறிபத்த நாயனார் புராணம் | Eripatha Nayanar HiStory இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற்கு அடியேன்! 63 நாயன்மார்களில் மென் தொண்டர்களும்…
அமர்நீதி நாயனார் வரலாறு | Amarneethi Nayanar History அமர்நீதி நாயனார் குருபூசை அமர்நீதியார் குருபூசை ஆனி மாதம் பூரம்…
விறன்மிண்ட நாயனார் குருபூசை விறல்மிண்ட நாயனாரின் குருபூசை சித்திரை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. விறன்மிண்ட நாயனார் வரலாறு சேர நாட்டிலுள்ள செங்குன்றூரில்…
திருத்தொண்டர் தொகை தில்லைவாழ் அந்தணர் சருக்கம் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்! திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்!இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்! இளையான்றன்…
மெய்ப்பொருள் நாயனார் புராணம் - meiporul nayanar history குருபூசை குரு பூஜை: கார்த்திகை / உத்திரம் அல்லது விருச்சிகம்…
குருபூசை திருநாள்: இளையான்குடி மாற நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆவணி மாதம் மக நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை கொண்டாடப்படுகிறது. சிவ…